அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வரலாறு

செல்வம் பெருகும் சிறந்த நலம் சேரும்
கல்வியும் கண்ணிய மும் கை கூடும்-நல்ல
குமரன் திருக்குன்றம் கூடித் தொழுதால்
அமர ரென வாழ்வார் அணிந்து
-திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

1958ம் ஆண்டு டிசம்பர் திங்கள் பத்தாம் நாள் நடமாடும் தெய்வமாக நூறு ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் குரோம்பேட்டைக்கு விஜயம் செய்த பொழுது, பங்களா மலை (தற்சமயம் குமரன் குன்றம்) என்றழைக்கப்பட்ட குன்றினைச் சுட்டிக் காட்டி, “இது பிற்காலத்தில் ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி சாந்நித்யம் பெற்ற பிரார்த்தனை ஸ்தலமாக விளங்கும்” எனக்கூறி அருளாசி வழங்கினார்.

“தெய்வத்தின் குரலல்லவா!” அன்று அம்மகான் கூறிய வண்ணம் இக்கோயில் பிரசித்தி பெற்று இன்று (9-2-2014) ஸ்ரீ சுவாமி நாதஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஆலய ஜீர்ணோத்தர அஷ்டபந்தனமும், நூதன இராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

சென்னைக்கு அருகில் குரோம்பேட்டை இரயில் நிலையத்திலிருந்தும், பேருந்து நிலையத்திலிருந் தும் 1 கி.மீ தொலைவில் கிழக்கிலுள்ளது. குமரன் குன்றம் வாயில் வரை சிற்றுந்தும், பேருந்தும் வரு கின்றன. ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி சத்சங்கம் என்ற அமைப்பை ஸ்ரீகாஞ்சி பெரியவர்கள் ஆசியுடன் ஆரம்பித்து, இப் பகுதி வாழ் பொது மக்களின் முழு ஒத்துழைப்புடன் 1976ல் ஸ்ரீ சித்தி விநாயகருக்கு மலையடி வாரத்தில் கோயில் கட்டி னர். மலைமேல் வேல் ஒன்று கிடைத்தது. அவ் வேலை பக்தர்கள் பலர் பூஜை செய்து வந்தனர்.

09-02-1979ம் ஆண்டு ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை யும் சிறப்பாக நடத்தினர். இன்று நடைபெறும் கும்பாபிஷேகமும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி யன்றே நடைபெறுவதும் அவன் சித்தமே!

03-02-1983ல் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருக்கரத்தி னால் “லகு சம்ப்ரோஷணம்” செய்து இக்கோயில் மேலும் வளர ஆசி கூறினார்கள்.

27-01-19991ல் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், நவக்கிரகங்கள், இடும்பன் சந்நிதிகள் அமைத்து சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஜகத்குரு சிருங்கேரி சாரதாபீடம் ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் 1995ல் விஜயம் செய்து அருளாசி வழங்கினார்கள். ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி சந்நிதி விரிவுபடுத்தப் பட்டு அர்த்த மண்டபம், மகா மண்டபம், தியான மண்டபம் அமைத்து கோபுரம் கட்டப்பட்டது. ஸ்ரீ ஜெயமங்கல தன்ம காளி, சூரியன், சந்திரன், பைரவர், சரபேஸ்வரர் முதலிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 03-05-1998ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத நடராஜருடன், மாணிக்க வாசகரையும், சிவன் கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து 12-06-2005 சிறப்பாக கும்பாபிஷேகம் நடை பெற்றது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ளது போல் கால் மாறியடுவது இவர் சிறப்பாகும்.

மேலும் இராஜகோபுரத்திற்கும் ஸ்ரீ விநாயகர் சந்நிதிக்கும் இடையில் கம்பீரமாக மண்டபம் ஒன்றும் எழுந்துள்ளது. இப்புதிய மண்டபம் வழியாக சென்று மலையடிவாரத்தின் தென் புறத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் தனிக் கோயிலாக அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் சந்நிதியையும், வடபுறத் தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேதராக ஷண்முகர் சந்நிதியையும் காணலாம். ஸ்ரீ ஷண்முகர் மாமனைப் போன்று சங்கு, சக்ரதாரியாக காட்சியளிப்பது மற்றொரு சிறப்பாகும். மலை ஏற முடியாதவர்கள் கீழிருந்த படியே முருக பெருமானை அடிவாரத்திலிருந்தபடியே வழிபடலாம்.

மலையடிவாரத்தின் தெற்கில் நவக்கிரகங் களுக்கு தனிக்கோயில் உள்ளது. சற்று மேலே சென்றால் புதிதாக இடம் மாற்றம் செய்யப் பட்ட தனிச்சந்நிதியில் இடும்பனை வணங்கலாம்.

அடுத்து நாம் சிவன் கோயிலுக்குச் செல்கின்றோம். இடது புறத்தில் தனிச்சந்நிதியில் அமர்ந்துள்ள ஸ்ரீ சர பேஸ்வரரை முதலில் தரிசித்து செல்வோம். ஸ்ரீ சுந்தரேஸ் வரர் ஆவுடையார் மேல் பாணலிங்கமாக காட்சி தருகிறார். ரிஷப வாகனத்தில் பிரதோஷம் சிறப்பாக நடைபெறுகிறது. கார்த்திகை சோமவாரம் கடைசி வாரத்தில் 108 சங்காபி ஷேகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மஹாசிவராத்திரி நான்கு கால சிறப்பு அபிஷேகம், பூஜைகள், திருவீதி உலா முதலிய சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன.

கருவறையைச் சுற்றி நர்த்தன கணபதியும், ரிஷபாரூட ரும் சண்டிகேஸ்வரர் தெற்கு சுவற்றில் ஆலமர் கடவுளாம் தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின் றார். மேற்குச் சுவற்றில் மஹா விஷ்ணுவும், விஷ்ணு துர்க்கையும் கோஷ்ட மூர்த்தங்களாக உள்ளனர்.

சிவன் சந்நிதியை அடுத்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் சந்நிதி உள்ளது. தனிக்கோயில் அம்பிகையின் கருவறையைச் சுற்றி தெற்கில் மாகேஸ்வரியும், மேற்கில் வைஷ்ணவியும், வடக்கில் பிராம்ஹியும் கோஷ்ட மூர்த்திகளாக உள்ளனர்.

சிவன் கோயிலில் உள்ள மற்றுமொரு தெய்வம் ஸ்ரீ சிவகாமி அம்மை சமேத ஸ்ரீ நடராஜர். தெற்கு நோக்கிய தனிச்சந்நிதி. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ளது போல் கால் மாறியாடுவது இவர் சிறப்பாகும். மாணிக்கவாசகரும் பன்னிரு திருமுறைக் கோயிலும் உள்ளன. ஸ்ரீ நடராஜ ருக்கு வருடத்தில் ஆறுமுறை அபிஷேகம். ஸ்ரீ நடராஜர் சந்நிதிக்குப் பக்கத்தில் ஸ்ரீ பைரவர் சந்நிதி உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தையும் அதன் அடியில் உள்ள விநாயகப் பெருமானையும் வணங்கி அப்பகுதியின் அழகைச் சற்று ரசிக்கலாம்.
மகா மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஒரு கையில் தண்டமும் மற்றொரு கரத்தை தொடையில் வைத்தவாறு இரு திருக்கரங்களுடன் ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி உற்சவரையும் அவருக்கு எதிரில் அமர்ந்த நிலையில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ அருணகிரிநாதரையும் தரிசித்து உள்ளே சென்றால் கருவறையை அடையலாம்.

கருவறையினுள்ளே ஸ்ரீ முருகப்பெரு மான் ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி என்ற திருப்பெயருடன் வடக்கு நோக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தரு கின்றார். வலது திருக்கரத்தில் தண்டம் தாங்கியும் இடது திருக்கரத்தை இடது தொடையைத் தொட்ட வண்ணமும் (ஊருஹஸ்தம்) ஊர்த்துவ சிகை மேல் நோக்கியும் பூணூல் கௌபீனம் தரித்தும் கம்பீரமாக புன்முறுவலுடன் அடியார் களுக்கு அருள்பாலிக்கும் அழகன் முருக னின் அற்புத தரிசனம் கண்டு மன நிறைவு கொள்கிறோம். எதிரில் யானை வாகனம்

விஜய வருஷம் தை மாதம் 27ம் தேதி 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஸ்ரீ சுவாமிநாதஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் நூதன இராஜகோபு ரத்திற்கும், திருக்குடமுழுக்குப் பெரு விழா நடைபெற உள்ளது.

ஆஸ்தீக அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இக்குடமுழுக்கு விழா வைபவத்தில் கலந்து கொண்டு இறை யருளைப் பெற வேண்டுகிறோம். காசோலை மற்றும் டிமாண்ட் டிராப்ட் மூலம் நன்கொடை வழங்குபவர்கள் “Kumaran Kundram Rajagopuram Thiruppani Committee”
என்ற பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டுகிறோம்.

To see  more information : www.kumarankundram.net

 

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt