மயூரவாகனசேவனம்
இருமயில் தோற்றமும் இணையிலாக் காட்சியும் (மயூரவாகனசேவனம்)
மார்கழி மாதத்துப் பூர்வ பட்சம் பிரதமை தோறும் ஏற்படக் கூடிய இச் சேவனத்தில் விமானத்தின் மிசை விக்கிரகம் இருத்தி வெளியே தூக்கிச் செல்லல் இல்லை. செய்யொணாதது என்பதே எனது துணிபாம். எழிலுடை இரண்டு கோழிக் கொடிகளுக்கும் வேல்களுக்கும் வச்சிராயுதத்துக்கும் புட்ப மாலைகள் சார்த்தப் பட்டுச் சந்தன தூப தீப உபசாரங்களோடும் நல்ல வாத்தியா தோத்திரங்களோடும் இனிது அலங்கரிக்கப்பட்ட வீதியில் அவை உலாவி இருப்பிடம் அடையத்தக்கன. சிறந்த ஆயுதம், குடை முதலியன கூடச் செல்லலாம். மற்றும் சிறப்புகள் பல புரியலாம். இருப்பிடத்தே மயூர வாகனப் பரமன் படத்தைப் பூந்தொடையல்களால் அலங்கரித்து விடியுங்காணும் சண்முக சகச்சிர நாமார்ச்சனை புரிதலோடு அசோக சால வாசமும் படித்தல் வேண்டும்.
அருட்பெருங் கடலின் மகிமைகளைக் குறிப்பாக எடுத்து விளம்பும் இது படியாமே இத்திருவிழா நடைபெறுவதில்லையாம். அடுத்த தினம் அடியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னமும் பயசு கலந்த மதுர பானமும் குறைவிலாது நல்கி உபசரித்தல் புரியத்தக்கது. பண வருவாய் அதிகம் ஏற்படின் பகர்ந்தது போந்த பரம காரியங்கள் ஏற்புடைமையில் பல திலைகள் புரிதலும் ஏற்புடைத்தே. ஞான பூஜையை அனுசரித்து நடப்பதே இப்பரம காரியங்கள் என எண்ணுக. செவியறிவுறூஉ….