திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை சாலை யின் அருகில் அழகிய சிற்றூராக மிளிர்வது நெய்வேலி கிராமம். பல மாதங்களுக்கு முன்பு சில சிவனடியார்கள் சேர்ந்து தாங்கள் கேள்விப்பட்டது உண்மையா? என்று அறிய நெய்வேலிக்குச் சென்றனர்.
Category Archives: Featured
கருணை மழை பொழியும் ஸ்ரீ கைலாசநாதர்
முன்னுரை ஈசன் வீற்றிருக்கும் இடம் ‘கைலாசம்’ என்றும், பெருமாள் வீற்றிருக்கும் இடம் ‘வைகுண்டம்’ என்றும் பக்தர்களால் போற்றப்படுகின்றன. ஈசனின் உறைவிடமான ‘கைலாசம்’ என்ற பெயரையே தன்னுடைய குழந்தைகளுக்கு சூட்டி புண்ணியம் தேடிக் கொண்டவர்கள் அக்காலத்தில் அதிகம். தற்பொழுது நாகரீகம் என்ற பெயரில் மனம் போனபடி பெயர் வைத்து பாவச்சுமையைச் சுமக்கின்றனர். திருநாவுக்கரசு சுவாமிகள் கயிலைமலையின் அடியில் உள்ள ஒரு பொய்கையில் ஈசனின் ஆணைப்படி மூழ்கி எழுந்து திருவையாற்றில் கயிலைக் காட்சியினை கண்டு களித்து ஒரு பதிகம் பாடினார்.
பிரம்மன் பூஜித்தஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர்
எமதர்மர் உயிர்கள் அனைத்தையும் கவர்ந்தா லும் அவரவர் விதிப்படி பாவ புண்ணிய செயல் களுக்கேற்ப நீதி வழங்குவார். யாரையும் தண்டிக்கமாட்டார். மிகவும் கருணை காட்டு வார். நீர் எவ்வித புண்ணிய செயல்களைச் செய்யாது போனாலும் பரவாயில்லை. கொடிய பாவியாக இருப்பினும் அவ்வுயிரை நோக்கி, பசித்தவருக்கு ஒரு பிடி அன்னம் அளித்தாயா? பசுவுக்கு ஒரு நாள் ஒரு வேளை ஒரு பிடி புல் கொடுத்துள்ளாயா? அல்லது புண்ணிய நதியில் ஒருநாளாவது நீராடியுள் ளாயா? பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்துள்ளாயா? என்று வரிசையாகக் கேட்பாராம்.
அகிலம் காக்கும் அகத்தீஸ்வரர்
பிரம்மாவின் மகனான கச்சய பருக்கு பன்னிரண்டு மகன்கள். அவர்களில் மித்திரனும், வருணனும் இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் மிக நெருக்க மாகப் பழகி ஒரே உடலுடன் இருந்தார்களாம். தேவலோகப் பெண்ணான ஊர்வசியுடன் அவர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டு, அதன் விளைவாக வந்த கருவை ஒரு குடத்தில் வைத்தார்களாம். சிறிது காலம் கழித்து குடத்தை உடைத்துக் கொண்டு இரு குழந்தைகள் வெளிவந்தன. அக்குழந் தைகளே வசிஷ்டரும் அகஸ்தியரும். குடத்திலி ருந்து பிறந்ததால் அவருக்குக் ‘கும்பமுனி’ என்ற பெயர் ஏற்பட்டது.
கோவையில் ஒரு காளகஸ்தி
‘வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க’ என்ற பண்டையப் பாட்டு வரிகளுக்கேற்ப, வேதாகமங்களின் வழியே சைவச் செந்நெறி, உலகுக்கு உய்யும் வழி காட்டுகிறது. தென்னாடுடைய சிவ பெருமானை எந்நாட்டவர்க்கும் உரியவராய் வைத்து அருளாளர்கள் வழிபட்டனர்.
விவேக சிந்தாமணியில் சமயச் சிந்தனைகள்!
எத்தொழில் செய்தாலும் ஈசனிடமே மனம்
ஓர் அடிமைப் பெண்ணானவர் தண்ணீர்க் குடத்தைத் தலையில் வைத்து வரும்போது வியக்கத்தக்க முறையில், குடத்தில் இருந்த கைகளை நீக்கிப் பலவிதமாக விளையாடி இருகைகளையும் வீசிக் கொண்டு நடந்து வரினும் அவளது உள்ளமானது தன் தலை யிலுள்ள குடத்தின் மீதே இருக்கும்.
சோகங்கள் போக்கும் ஸ்ரீசோமநாதேஸ்வரர்
சந்திரன் வழிபட்ட சிவத்தலங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றில் வேலூர் மாவட்டத்திலுள்ள மஹேந்திரவாடியும் ஒன்று. சந்திரன் வழிபட்ட காரணத்தினால், இத்தலத்திலுள்ள ஈசனின் பெயர் ஸ்ரீ சோமநாதேஸ்வரர்.
ஆசிரியர் பக்கம்
வணக்கமும் வாழ்த்தும், பரம் பொருளின் கருணையாலும் குருநாதர் அருளாலும் நன்மையே நடக்கட்டும். சத்தியத்தின் வலிமையையும், நேர்மையின் வெற்றியையும், அன்பின் அற்புதத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பாம்பனார் பணி மன்றம்
பாம்பனார் பணி மன்றம் 1999 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தேனமர் சோலை தேனாம்பேட்டை பாலசுப்ரமணியர் ஆலயத்தில், பல ஆன்றோர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.