Swamigal Varalaru Swamigal Aruliyavai Iniyavazhvirkku Vazhi Contact Us
 
 
  நீதிமன்றத்திலும் நின்றார் வென்றார்
 

இந்நிலையில் இராமாநுச ரெட்டியார் எனும் வைணவர் சீவநிந்தை செய்து வெளியிட்ட ஆபாசப் பத்திரிகையைச் கண்ணுற்ற ஆசிரியர் 1908ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் தென்னார்க்காடு ஜில்லா மாஜிஸ்திரேட் கனம் நாப் முன்னிலையில் மேற்படியார்கள் மீது வழக்கு தொடர்ந்தார்கள். சைவசமய சரபம் வெளியிட்டமைக்காக திருவனந்தபுரம் ந.சுப்பிரமணிய பிள்ளை மீதும் சுவாமிகள் மீதும் இராமநுசதாசர் எனும் வைணவர் வழக்குத் தொடுத்தார். சுவாமிகள், வழக்கின் பொருட்டு கூடலூர், மஞ்சகுப்பம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சோமாசிபாளையம், திருவெண்ணெய் நல்லூர், சிதம்பரம், திட்டக்குடி, விக்ரவாண்டி, புளியங்குடி ஆகிய ஊர்களில் உள்ள அறமன்றங்களுக்கெல்லாம் செல்ல நேர்ந்தது. சைவ சமயத்தின் பெருமையைக் காக்கும் பொருட்டு ஏழாண்டுகள் சுவாமிகள் ஓயாது போராடி இறுதியில் வெற்றியும் பெற்றார். வாய்மையே வெல்லும் என்பதைத் தன் வரலாற்றிலும் நிலை நாட்டி விட்டார்.

Audio - Click to ON / OFF :