ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில்

ஈரோடு மாநகரின் இதயமாக விளங்கும் மணிக்கூண்டு பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.  திருத்தொண்டீச்சு வரம் என்று புராண காலத்தில் வழங்கப்பட்ட இவ்வாலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந் துள்ள ஊர் ஆதலின் ஈரோடு (ஈரோடை) என அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.
கொங்கு நாட்டில் பல்வேறு சிறப்புடைய சிவாலயங்களும் பாடல் பெற்ற

ஸ்தலங்கள் இருந்தபோதும் தேவ சாபத்தால் பிறந்த தேதி முதல் இரட்டையர் பெண்கள் செய்த அதிசய மும்  நெசவுத் தொழி லாளியின் பக்திச் சிறப்பை உலகுக்கு உணர்த்த இறைவன் நடத்திய திருவிளையாட லும் இத்தலத்திற்கே உடைய சிறப்பாக தல வரலாறு கூறுகிறது.
சுவாமிக்கும் அம்பா ளுக்கும் தனித்தனி ஆலயம் தனித்தனி ராஜ கோபுரம் கொடிமரம் முதல் சுற்றில் விசால மான பிரகாரம் அமைந்து கம்பீரமாக அமைந்துள்ளது.

சுவாமி – ஆருத்ரா கபாலீஸ்வரர்

அம்பாள் – வாரணாம்பிகை
ஸ்தலவிருட்சம் – வன்னிமரம்

திருவிழா :
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்,

திருக்கார்த்திகை
தல சிறப்பு :
ஆருத்ரா நாதர் மீது ஆண்டுதோறும் மாசிமாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய ஒளி மூலவர் மீது படுவதும் அந்நாட்களில் சிறப்பு அபிஷேகமும்; செய்வதும் பழமையாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில் ஒரே லிங்கத்தில் 1008 (ஆயிரத்தி எட்டு) சிவலிங்கம் பொரிக்கப்பட்டு காட்சி தருவது சிறப்பு.
முதல் இரட்டைப் பெண்கள் சின்ன நல்லக்காள், பெரிய நல்லக்காள் பிறந்த ஊர்.  இங்கிருந்து 15 கி.மீ தூரத்தில் இன்றும் காணப் படும் எழுமாத்தூர் மலை பொன்னிறமாகக் காட்சி தருகிறது.  இரண்டு குன்றுகள் கோபுரம் போல் உயர்ந்து இணைந்து இரட்டைக் குன்றாகக் காட்சி தருகிறது.  பெரிய நல்லக் காள் சின்ன நல்லக்காள் மலை என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் முதல் முதலாக தமிழில் அர்ச்சனை நடைபெற்றதும் இத்திருக்கோயிலில்தான்.  இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.
திறக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் :
பெரிய நல்லக்காள் மலை, சின்ன நல்லக்காள் மலை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  இம்மலை இன்றும் பொன்நிற மாக காட்சியளிக்கிறது.  ஏழு மாற்றுள்ள பொன் இம்மலையில் கிடைத்தால் இந்த ஊர் எழுமாத்தூர் என பெயர் பெற்றது.  கனககிரி என்றும் இதற்கு பெயர்.
இக்கோயிலின் அருகிலேயே கஸ்தூரி அரங்க நாதர் கோயில் அமைந்துள்ளது சிறப்பாகும்.
ஈரோடு கோட்டை பகுதியில் தொண்டீசு வரர் அருள்புரியும் இந்த கோயில் உள்ளது. கோயிலின் ராஜகோபுரம் அழகிய வேலைப் பாடு உடையது.  முன் மண்டபத்துக்கும், மடப்பள்ளிக்கும் இடையே சூரியன் தன் இருபெரும் தேவியரோடு காட்சி தருகிறார்.  தென்மேற்கு பகுதியில் கன்னி விநாயகர் உள்ளார்.  மேற்கில் தல விருட்சமாகிய வன்னிமரம் உள்ளது.  பொல்லாப்பிள்ளையார் முதல் அறுத்து மூன்று நாயன்மார்களும் அமர்ந்திருப்பது சிறப்பு.
தட்சிணாமூர்த்தியும் அங்கு வீற்றிருக்கிறார்.  சப்த கன்னியரை கடந்து சென்றால் மேற்குபுறம் ஐம்பெரும் தத்துவங்களை விளக்கும் ஐந்து லிங்கங்களையும் விளக்க ஓவியங்களுடன் காணலாம்.
பிரார்த்தனை :
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க, நெசவுத் தொழில் விருத்தியடைய இறைவனை பிரார்த் திக்கலாம்.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், ஆடை தானம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தலபெருமை : முதல் இரட்டை குழந்தை கள்: தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி ஆகியோர் வியாழ பகவானைக் கவனியாமல் ஆடிக்கொண்டிருந்தனர்.  இதனால் கோபம் அடைந்த தேவகுரு ‘பூந்துறை நாட்டில் முத்தி என்ற தாசி வயிற்றில் இரட்டைக் குழந்தை களாக பிறப்பீர்கள்” என சபித்தார்.  சாப விமோசனம் வேண்டிய அவர்களை மன்னித்த தேவகுரு, ‘தாசியின் வயிற்றில் பிறந்து 12 ஆண்டுகள் பார்வதி தேவியை வணங்கி வந்தால், ஐராவதம் ஏறிய இந்திரன் நீங்கள் வாழும் பூந்துறை நாட்டில் பொன்மாரி பெய்வான்.  அப்போது உங்கள் சாபம் நீங்கும் என்கிறார்.
தேவகுருவின் சாபத்தால் ரம்பை, ஊர்வசி இருவரும் அழகாலும் குணத்தாலும் சிறந்த தாசி முத்தியின் வயிற்றில் பிறந்தனர்.  அவர்கள் சிறுநல்லாள், பெருநல்லாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்.  தேவகுருவின் வாக்கின்படியே சிறுநல்லாள், பெருநல்லாள் இருவரும் ஈரோட்டில் குடி கொண்டுள்ள இறைவனையும், இறைவியையும் மனமுருக வழிபாடு செய்தனர்.  அவர்களது அன்புக்கு இறங்கிய சிவன், இந்திரன் மூலம் பூந்துறை நாட்டில் பொன்மாரி பொழிய வைத்து பாவம் போக்கினார் என்பது வரலாறு.
எழுமாத்தூர் மலை :
மானிடப் பிறவி எடுத்த சிறுநல்லாள், பெருநல்லாள் இருவரும் கடும் வறுமையில் உழன்றனர்.  அவர்களின் வறுமையை போக்க சிவபெருமான், பொன் மயமான இருமலை களை தானமாக வழங்கினார்.  அந்த மலைகள் தற்போது மொடக்குறிச்சி அருகே எழுமாத் தூருக்கு மேற்கே இரட்டை மலைகளாக காட்சியளிக்கின்றன.  பொன்மலை, கனககிரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
சூரிய வழிபாடு :
இந்தக் கோயிலில் சிவபெருமானை சூரியன் வழிபட்டார்.  எனவே சூரிய வழிபாடு இங்கு சிறப்பாக நடக்கிறது.  மாசி மாதம் இறுதி நாட்களில் எல்லா மண்டபங்களையும் கடந்த சூரிய ஒளி இறைவன் முன் செல்கிறது.  அந் நாட்களில் இங்கு சிறப்பான வழிபாடு நடக்கிறது.  துர்வாசர் இங்கு, பள்ளி கொண்ட சிவபெரு மானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt